Our Feeds


Sunday, July 21, 2024

SHAHNI RAMEES

கிளப் வசந்த கொலை – கைதான யுவதியை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

 

கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 வயதான யுவதியை 48 மணி நேரம் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்ற பொலிஸாரின் கோரிக்கைக்கு கடுவலை பதில் நீதவான் அனுமதியளித்துள்ளார்.

இன்று (21) கடுவலை பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபரான பெண் அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »