Our Feeds


Saturday, July 13, 2024

Sri Lanka

கிளப் வசந்தவின் இறுதிக்கிரியைகள் இன்று



அத்துருகிரிய பிரதேசத்தில் கடந்த 8ஆம் திகதி பச்சை குத்தும் நிலையமொன்றை திறக்கச் சென்ற கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேரா மற்றும் மேலும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


இந்நிலையில் குறித்த படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் லொகு பெடியின் மைத்துனர் உட்பட மூவர் வெலிப்பென்ன, குருந்த பிரதேசத்தில் வைத்து குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்களின் வீடுகளையும் பொலிஸார் சோதனையிட்ட நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பதுங்கியிருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் வீடுகளை சோதனையிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எனினும், அங்கிருந்து சந்தேகத்திற்குரிய வகையில் எதுவும் கிடைக்கவில்லை.


அதன்படி, சந்தேகநபர்கள் மூவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், கிளப் வசந்தவின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜெயரத்ன மலர்சாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.


அங்கு, பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.


இவ்வாறானதொரு பின்னணியில் இன்று (13) கிளப் வசந்தவின் இறுதிக் கிரியைகள் பொரளை பொது மயானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »