Our Feeds


Thursday, July 25, 2024

Sri Lanka

எதிர்க்கட்சிகளுக்கு பாதாள உலகம் அடைக்கலம் - அமைச்சர் பிரசன்ன


பாதாள உலகம் எதிர்க்கட்சிகளுக்கு அடைக்கலம் தருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

யுக்திய நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர், இதன்காரணமாகவே பொலிஸ் மா அதிபரை பதவி நீக்குமாறு எதிர்க்கட்சிகள் வாதாடி வருவதாகவும் வலியுறுத்தினார்.

பொலிஸ் மா அதிபர் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அமைச்சர்கள் பலர் இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு பற்றி பேசாமல், பொலிஸ் மா அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் பேசினால், எதிர்க்கட்சிகளின் உண்மையான ஆர்வம் தெரியவந்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »