Our Feeds


Thursday, July 11, 2024

SHAHNI RAMEES

சிசு செரிய திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை...!

 



தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும்

சிசு செரிய திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.




சிசு சரிய திட்டம் 2005 ஆம் ஆண்டு முதல் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் மானிய கட்டண முறையின் கீழ் மிகவும் நம்பகமான பஸ் சேவையை வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது, இதன் மூலம் பாடசாலை மாணவர்கள் மன மற்றும் உடல் அசௌகரியம் இல்லாமல் சரியான நேரத்தில் பாடசாலைக்கு சென்று முடித்துவிட்டு பாதுகாப்பாக வீடுகளுக்கு செல்ல முடியும்.




இத்திட்டத்தின் கீழ் மாணவர்களை அரசு மற்றும் தனியார் பஸ்கள் மூலம் ஏற்றிச் செல்வார்கள்.




இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கிய 1,537 பாடசாலை பஸ் சேவைகள் தற்போது இயங்கி வருகின்றன, நாளொன்றுக்கு சுமார் ஒரு இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குகிறது.




2024 ஆம் ஆண்டில் 500 புதிய பஸ் சேவைகளை ஆரம்பிக்க தேவையான 202 மில்லியன் ரூபாவை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நிதியில் இருந்து ஒதுக்குவதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »