Our Feeds


Thursday, July 25, 2024

Sri Lanka

மொட்டுக் கட்சிக்கு ஜனாதிபதியின் பரிசு!


கட்சியை பிளவு படுத்தியதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமக்கு கொடுத்த பரிசு என  நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகத்தில் இன்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

“ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்கினோம்.எமக்குப் பொருத்தமில்லாத விடயங்களை அவர் செய்தாலும் இன்று வரை நாங்கள் எதுவும் கூறவில்லை. ஆனால், கட்சி இரண்டாகப் பிளவுபட்டதுதான் நமக்குக் கிடைத்த பரிசு. எனவே எதிர்காலத்தில் அரசியல் முடிவொன்றை எடுப்போம். ஆனால் ரணில் அவர்களுக்கு நாங்கள் உண்மையாகவே உதவி செய்தோம். அவர் அதை மொட்டுவுக்கு செய்யவில்லை. அவர் வரும் ​போதே அது நமக்குத் தெரியும். ஐ.தே.கயை உடைத்தார்.  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, நல்லாட்சி அரசாங்கம், ஜே.வி.பி உடைந்தது, விடுதலைப் புலிகளும் உடைக்கப்பட்டனர்.

"நாங்கள் இன்றும் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடி வருகிறோம். இணக்கம் ஏற்பட்டால்  அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பில் விவாதிக்க நாங்கள் தயார்."

"ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள அனைவருடனும் கலந்துரையாடுவோம். அதன் பின்னரே இறுதி முடிவு எடுப்போம்."

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »