Our Feeds


Thursday, July 18, 2024

Sri Lanka

அரபிக் கடலில் விபத்தில் சிக்கிய கப்பலில் இருந்து இலங்கையர் உட்பட 9 பேர் மீட்ப்பு - நடப்பது என்ன?



அரபிக்கடலில் விபத்துக்குள்ளான எரிபொருள் கப்பலில் இருந்த 16 பணியாளர்கள் காணாமல் போயிருந்த நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் 09 பேர் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


மீட்கப்பட்டவர்களில் 08 இந்தியர்களும் இலங்கையர் ஒருவரும் அடங்கியுள்ளதாக அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.


எஞ்சிய 7 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.


குறித்த கப்பலில் 16 பணியாளர்கள் இருந்ததாகவும் அதில் 13 பேர் இந்தியர்கள் எனவும் ஏனைய மூவர் இலங்கையர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஓமனின் துறைமுக நகரமான டுக்மில் இருந்து தென்மேற்கே 25 கடல் மைல் தொலைவில் அரபிக்கடலில் இந்த எரிபொருள் கப்பல் கவிழ்ந்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »