Our Feeds


Tuesday, July 9, 2024

Sri Lanka

ஒவ்வொரு திங்கள் மாலை 6 மணிக்கு ஜனாதிபதி, பிரதமர், பசில் ஆகியொர் சந்தித்துக் கொள்கிறார்கள் - அமைச்சர் காஞ்சன



ஒவ்வொரு திங்கட்கிழமை மாலை 6 மணிக்கும் ஜனாதிபதி, பிரதமர், பசில் ராஜபக்ஷ மற்றும் எமது குழுவினர் சந்தித்து கலந்துரையாடுகிறோம் என்கிறார் அமைச்சர் காஞ்சன விஜேசேகர.


ஜனாதிபதி வேட்பாளர் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டார், வெளியே கூறும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அமைச்சர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.


அந்தக் கலந்துரையாடலில் நமது தேர்தல் வெற்றி குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடுகிறோம். இது குறித்து உரிய நேரத்தில் கட்சியினால் மக்களுக்கு அறியப்படுத்தப்படும்.


எல்லோரும் இணைந்து பயணித்தால் தான் வெற்றி நிச்சயம். அதுதான் உண்மையும் கூட, அதற்காகத் தான் நாம் இன்று பாடுபடுகிறோம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »