ஹைதி நாட்டிலிருந்து அகதிகள் சிலர் துர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் தீவை நோக்கி புறப்பட்ட படகு திடீரென தீப்பிடித்ததில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் 41 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
தீ விபத்தில் காயமடைந்தவர்கள் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மூலம் சிகிச்சை பெற்று வருவதோடு, 11 பேர் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் படகில் இருந்தவர்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி தாங்கள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்த போது எரிபொருள் நிரப்பப்பட்ட கொள்கலன்களில் தீப்பிடித்து எரிந்துள்ளதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் வெளிநாட்டு செய்திச் சேவைக்கு கூறியுள்ளார்.