Our Feeds


Monday, July 15, 2024

Sri Lanka

24 மணிநேரத்தில் 11 இலட்சம் மரக்கன்றுகள் நாட்டி உலக சாதனை !


இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் 24 மணி நேரத்தில் 11 இலட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.


மத்திய பிரதேச அமைச்சர் மோகன் யாதவ், கின்னஸ் புத்தகத்தில் இருந்து உத்தியோகப்பூர்வ சான்றிதழை பெற்றுக் கொண்டார்.


இந்த சாதனை குறித்து மோகன் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


அதில், தூய்மையான நகரம் என்ற சாதனையை தொடர்ந்து ஒரே நாளில் அதிக மரக்கன்றுகள் நடப்பட்ட நகரம் என்ற சாதனையையும் படைத்த இந்தூரின் சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தூர் நகரம் ஒரே நாளில் 11 இலட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »