பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் 1.4 மில்லியன் லீற்றர் எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் கடலில் மூழ்கியுள்ளது.
எண்ணெய்க் கப்பல் கடலில் மூழ்கியுள்ளதால் சுற்றியுள்ள கடற்பகுதியில் பாரிய எண்ணெய் படலங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்த 17 பணியாளர்களில் 16 பேரை மீட்டுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.