கடந்த ஆறு மாதங்களில் மனித பாவனைக்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்த 11,261 கடைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உணவின் பொருட்கள் மற்றும் உணவின் காலாவதி திகதி குறித்து
கவனம் செலுத்துமாறும், வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட ஹோட்டல் அல்லது உணவகத்தில் உணவு வாங்கினால், உணவு எவ்வாறு சேமிக்கப்படுகிறது என்பதில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.