ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான 10 பில்லியன் ரூபா தேர்தல் திணைக்களத்துக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் இடம்பெறுமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் தொடர்ந்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையில்,
தேர்தலுக்கான செலவுகளுக்காக 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதி தேர்தல் திணைக்களத்துக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். அந்த தேர்தலினூடாக புதிய ஜனாதிபதியொருவரும் தெரிவுசெய்யப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.