Our Feeds


Wednesday, June 12, 2024

SHAHNI RAMEES

SJB MP நளின் பண்டாரவின் ஜீப் வாகனம் மோதிய இளைஞன் உயிரிப்பு...! - நடந்தது என்ன?

 



நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த

ஜீப் வாகனம் மோதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


8 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிறட்சை பெற்று வந்த 22 வயதுடைய இளைஞனே நேற்று (11) உயிரிழந்துள்ளார்.





தலையில் பலத்த காயம்

கொழும்பு பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.


விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக வட்டுபிட்டியல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.


இந்நிலையில் இளைஞனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் விபத்து இடம்பெற்ற நேரம் முதல் அவர் சுயநினைவின்றி இருந்த நிலையில் சிகிற்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.



அதேவேளை , நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டியின் சாரதியை நிட்டம்புவ பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »