Our Feeds


Sunday, June 16, 2024

SHAHNI RAMEES

வாகன பேர்மிட் தராவிட்டால் தேர்தலில் போட்டியிட மாட்டோம்...! MPக்கள் டிமாண்ட்!

 

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பில் அரசாங்கத்திற்குள் இழுபறி நிலவி வருவதால் அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க முடியாதுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசாங்கத்தின் ஒரு தரப்பினர் கூறிய நிலையில், அதனை பெறக்கூடாது என மற்றைய தரப்பினர் கூறியதால் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இத்தருணத்தில் எம்.பி.க்கள் வரியில்லா வாகன உரிமம் பெற்றால் அது மக்களை வெறுப்படையச் செய்யும் என அரசின் ஒரு தரப்பு கூறுகிறது.

இது அரசாங்கத்தின் வாக்காளர் தளத்திற்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் எனவும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், பல வருடங்களாக வாகன அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ளப்படாத நிலையில், இந்த நேரத்தில் அதனை பெற்றுக்கொள்வதே பொருத்தமானது என அரசாங்கத்தின் மற்றுமொரு குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை.

தேர்தலுக்கு முன்னர் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் அண்மையில் கையளித்தனர். பின்னர் சபாநாயகரால் ஜனாதிபதியிடம் கடிதம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை, வாகன அனுமதிப்பத்திரம் கிடைக்காவிடின் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »