அரசின் “பரவலாக்கப்பட்ட நிதி” ஊடாக சில எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டமை குறித்து பாராளுமன்றில் நேற்றும் இன்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களினால் கேள்வியெழுப்பப்பட்டது.
நேற்றைய தினம் பாராளுமன்றில் இப்பிரச்சினை பற்றி கேள்வியெழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர அவர்கள் குறித்த நிதியை பெற்ற எதிர்கட்சி உறுப்பினர்களின் பெயர்களையும் அவர்கள் பெற்ற பணத்தின் அளவையும் பகிரங்கமாக வெளியிட்டார்.
குறித்த நிதியிலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனுக்கு 8 கோடி 40 லட்சங்களும், மு.க MP க்களான ஹரீஸ், பைசல் காசிம், மற்றும் அலி ஸாஹிர் மௌலானா மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானுக்கு 10 கோடிகளும் அரசாங்கத்திடமிருந்து வழங்கப்பட்டுள்ளதாக தயாசிரி ஜயசேகர பாராளுமன்றில் தெரிவித்தார்.
இதே வேலை, தன் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றமை தனக்கு தெரியாது என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
இவர்கள் தவிர்த்து கண்டி மாவட்ட த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் உள்ளிட்ட மேலும் சில எதிர்க்கட்சி எம்.பி க்களும் இந்த நிதியை பெற்றுக்கொண்டுள்ளனர்.