Our Feeds


Tuesday, June 18, 2024

Anonymous

BREAKING: ஈரானில் பாரிய சக்தி வாய்ந்த நில நடுக்கம் | தற்போது வரை 4 பேர் உயிரிழப்பு 120 பேர் படுகாயம்!

 



ஈரானின் வடகிழக்கு நகரமான காஷ்மரில் 4.9 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்ததுடன், 120 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.24 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.


இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததுடன்,120 பேர் படுகாயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 2003-ல் ஈரானின் தென்கிழக்கு நகரமான பாமில் ஏற்பட்ட 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 31,000 க்கும் அதிகமான மக்களைக் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »