Our Feeds


Friday, June 21, 2024

SHAHNI RAMEES

பத்து மாவட்டங்களில் வேகமாக டெங்கு பரவல்

 

சீரற்ற காலநிலையால் பத்து மாவட்டங்களில் டெங்கு வேகமாகப் பரவி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.



கடந்த 24 மணித்தியாலங்களில் 161 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அத்துடன், இம்மாதம் 20 நாட்களுக்குள் 2,044 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.



கடந்த மே மாதத்தில் 2,647 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இது அதிகரிப்பாகும்.



இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆகும்.



இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், கண்டி, குருநாகல், புத்தளம், காலி, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் டெங்கு பரவல் வேகமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »