Our Feeds


Thursday, June 27, 2024

Zameera

கெஹலியவின் ரிட் மனு விசாரணை ஒத்திவைப்பு


 முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த ரிட் மனு இன்று மீண்டும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குறித்த வழக்கு இன்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது  ஜூலை மாதம் 01ஆம் திகதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது.

இன்றையதினம் சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நிர்மலன் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார்.

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் தன்னை வழக்கு விசாரணை முடியும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்துச் செய்து ஆணை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ரிட் மனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »