Our Feeds


Saturday, June 22, 2024

SHAHNI RAMEES

முச்சக்கரவண்டி பஸ்ஸுடன் மோதி விபத்து - தாயும் மகளும் ஸ்தலத்திலேயே பலி

 

முச்சக்கர வண்டி ஒன்று, பஸ் ஒன்றுடன் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

 

அனுராதபுரத்திற்கு யாத்திரை சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றே பஸ்ஸில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

வத்தேகம பிரதேசத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோர் முச்சக்கரவண்டியில் அனுராதபுரம் நோக்கி சென்றுள்ளனர்.

 

இதன்போது, ​​தம்புள்ளை பகுதியிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றுடன் நேருக்கு நேர், மோதி விபத்துக்குள்ளானதுஃ

 

இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்த 54 வயதான தாய் தம்மிகா பத்மினி மற்றும் 17 வயதான மகள் சசினி தாரகா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

 

முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற மகனும், பின்னால் பயணித்த தந்தையும் மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »