Our Feeds


Tuesday, June 4, 2024

Anonymous

இரத்தினபுரியில் நாளை நடைபெறவிருந்த உலக சுற்றாடல் தினம் நிகழ்வு இரத்து

 

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இரத்தினபுரியில் நாளை (5) நடைபெறவிருந்த உலக சுற்றாடல்  தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய நிகழ்வு அனர்த்த நிலைமை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

சிங்கராஜ வனப்பகுதியின் நுழைவாயில் அமைந்துள்ள இரத்தினபுரி குடாவ பகுதியில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவிருந்த நிகழ்வு சீரற்ற காலநிலை காரணமாக அங்கிருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நிகழ்விற்கு செலவிடப்படும் பணத்தை அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகளுக்கும் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நட்டஈடு வழங்குவதற்கும் பயன்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். 

இரத்தினபுரியில் தற்போது நிலவும் வெள்ளம் மற்றும் கடும் மழை காரணமாக நாளை ஜனாதிபதி செயலகத்தின் புதிய மைதானத்தில் விழாவைக் கொண்டாடுவதற்கு சுற்றாடல் அமைச்சு ஏற்பாடுகளைச் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »