Our Feeds


Friday, June 21, 2024

Zameera

உயர்தர மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு


 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடு நீடிக்கப்படாது என்பதால் அதற்கு முன்னதாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பரீட்சை திணைக்களம் கோரியுள்ளது.

வரும் 10ம் திகதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் தனியார் விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மாணவர்கள் படிக்கும் பாடசாலை அதிபர் மூலமாக விண்ணப்பங்களை நேரில் அனுப்ப வேண்டும்.

பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk ஆகிய இணையத்தளங்களுக்குச் சென்று விண்ணப்பங்களை கையடக்கச் செயலியின் ஊடாக ஆன்லைனில் அனுப்ப முடியும் எனவும், இது தொடர்பான மேலதிக தகவல்களை பரீட்சைகள் திணைக்களத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல்களை பரீட்சைத் திணைக்களத்தின் நேரடி தொலைபேசி எண் 1911 அல்லது வழமையான தொலைபேசி எண்கள் ஊடாக அணுகி அறிந்து கொள்ளலாம்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »