Our Feeds


Wednesday, June 12, 2024

Anonymous

ரனிலின் ஐ.தே.க வுக்கு அது இறுதிக் காலமாக அமையலாம் - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை.

 



இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் நடத்தப்பட வேண்டிய தேர்தலை ஒத்திவைக்க முயற்சி செய்தால், அது ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதிக் காலமாக அமையலாம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அரசியல் யாப்பின் பிரகாரம் தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது என தெரிவித்த மகிந்த ராஜபக்ச அவ்வாறான முட்டாள்தனமான வேலையை செய்வார் என தான் நினைக்கவில்லை எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.


அது தொடர்பில், ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மகிந்த இவ்வாறு தெரிவித்தாார்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக சரியான நேரத்தில் வேட்பாளரை முன்நிறுத்துவதாகவும், கட்சியிலிருந்து சிலர் விலகிச் செல்வதால் கட்சிக்கு எந்தவித குறையும் ஏற்படாது என்றும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.


எதிர்வரும் ஒக்ரோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கிடையே நிச்சயமாக நடத்த வேண்டும். எனினும் தேர்தலை ஒத்திவைக்க ரணில் தரப்பினர் தயாராகி வருவதாக பல தரப்புகளில் பேசப்பட்டு வருகின்றன.


எனினும் இது சட்டரீதியாக அமுல்படுத்துவது கடினம் என்பதால் இதனை பல தரப்பினரும் எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »