Our Feeds


Tuesday, June 4, 2024

Anonymous

அத்தனகலு ஓயா சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!

 

 

அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 4 மணியளவில் நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

அத்தனகலு ஓயா வடிநிலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை படிப்படியாக தாழ்வான பகுதிகளில் அதிகரித்து வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கம்பஹா, ஜாஎல, கட்டான, வத்தளை, மினுவாங்கொடை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட தாழ்நிலப் பிரதேச மக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக் கொள்கிறது.

மேலும், அப்பகுதியைச் சுற்றியுள்ள வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »