Our Feeds


Tuesday, June 25, 2024

SHAHNI RAMEES

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை...!

 


யக்கலமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பகொட

பகுதியில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.


நேற்று (24) இரவு இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்தவர் பொல்பகொட, யக்கலமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவரெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.


இந்த கொலைக்கான காரணமோ, சந்தேக நபரோ இதுவரையில் கண்டுபிடிக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கலமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »