Our Feeds


Saturday, June 15, 2024

SHAHNI RAMEES

காத்தான்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கான காரணம் வௌியானது!




 காத்தான்குடி அஹமட் வீதி பகுதியில் வீடொன்றில் இருந்த

பெண்ணை இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு மிரட்டி பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.


சந்தேக நபர் துப்பாக்கியாலும் கைகளாலும் பெண்ணைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


தாக்குதலில் காயமடைந்த 32 வயதுடைய பெண் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


குறித்த சந்தேக நபர் பெண்ணின் பையிலிருந்த தங்க நகைகளையும் 20 இலட்சம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, ஆரியம்பதி கிழக்கைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »