Our Feeds


Friday, June 14, 2024

Zameera

விஜேதாசவுக்கு எதிராக தடையுத்தரவு நீடிப்பு


 நீதியமைச்சர்  விஜேதாச ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்கும் வகையில் அவருக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை எதிர்வரும் 28ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மேலதிக மாவட்ட நீதவான் திருமதி சாமரி வீரசூரிய, வெள்ளிக்கிழமை (14) உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தாக்கல் செய்துள்ள மனுவில், சரத் ​​ஏக்கநாயக்க, கீர்த்தி உடவத்த மற்றும் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோரை பிரதிவாதிகளாக  குறிப்பிடப்பட்டுள்ளனர்.  

தடை உத்தரவுக்கு எதிரான தரப்பினரின் ஆட்சேபனைகள் மற்றும் பதில்களை ஜூலை 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »