Our Feeds


Tuesday, June 25, 2024

SHAHNI RAMEES

இந்திய மீனவர்கள் 10 பேர் கைது..!

 

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகுடன் 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைதான 10 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

 

நாகபட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன் 500-க்கும் மேற்பட்ட விசைபடகுகள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளன. இந்த நிலையில் மீன்கள் குறைவாக கிடைத்ததால் சில படகுகள் திரும்பி வந்த நிலையில் தற்போது இலங்கை கடற்படையால் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

 

குறிப்பாக நாகப்பட்டினம் அக்கைபேட்டையை சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு இலங்கை நெடுந்தீவுக்கு அருகே மீன்பிடித்ததாகவும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரின் கப்பல் மீது படகு மோதியதில் கடற்படை வீரர் ஒருவர் கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.

 

இதனையடுத்து அந்த படகை கைப்பற்றிய கடற்படையினர் அதில் இருந்த மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »