Our Feeds


Saturday, June 22, 2024

SHAHNI RAMEES

ஜெல்லிமீனால் பாதிக்கப்பட்ட 10 பேர் வைத்தியசாலையில்....

 



ஜெல்லிமீன் உடலில் பட்டதால் ஏற்பட்ட தோல் ஒவ்வாமை

காரணமாக பத்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த பத்து பேரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.


இதனால், உடலில் குறித்த பகுதிகளில் சிவத்தல், அரிப்பு மற்றும் வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.


குறித்த குழுவினர் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »