கடந்த 12ஆம் திகதி வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக 5 மீனவர்கள் கடலுக்கு சென்றிருந்தனர்.
பல நாள் மீன்பிடி படகு மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த பகுதியில் பெய்த கனமழை காரணமாக அவ்வழியாகச் சென்ற கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானதாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், ஒலுவில் கடற்கரை வீதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரே காணாமல் போயுள்ளார்.
மேலும் ஒருவர் காயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த விபத்தில் மற்ற இருவருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினர் மற்றுமொரு மீன்பிடி படகின் உதவியுடன் இவர்களை மீட்டுள்ளனர்.
வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.