வத்தளை – கெரவலபிட்டி பகுதியின் பல இடங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
கொழும்பு மற்றும் அதன் அண்மித்த பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நிலையம் குறிப்பிடுகின்றது.
குறித்த பகுதியிலுள்ள 20திற்கும் மேற்பட்ட வீடுகளில் 2 முதல் 3 அடி உயரத்திற்கு வெள்ள நீர் தேங்கி நிற்பதாக தெரிய வருகிறது.
இந்த பகுதியில் சட்டவிரோத வீடுகள் மற்றும் கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையினால், நீர் வெளியேறுவதற்கான வடிகாண் வசதிகள் முடக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இதனாலேயே, இவ்வாறு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிடுகின்றது