Our Feeds


Wednesday, May 29, 2024

Zameera

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம்


 பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் இணைத் தலைவர் பிரியந்த எஸ். தம்மிக்க குழுக்களை நியமிப்பதன் மூலம் மாத்திரம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“பல வருடங்களாக பல்கலைக்கழக அமைப்பில் நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வு காண அமைச்சரவைக்கு அனுப்பப்பட்ட இரண்டு அமைச்சரவைப் பத்திரங்களுக்கு நல்ல பதில் கிடைக்கும் என வேலைநிறுத்தம் செய்யும் சங்கம் என்ற வகையில் நாங்கள் நம்பினோம்.

இது தொடர்பாக எங்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமான பதில் வரவில்லை. நாங்கள் கேள்விப்பட்டபடி, இதற்காக மற்றொரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

எனவே, பல்கலைக்கழக ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு 27 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர், வேறு ஒரு குழுவை நியமிக்க வேண்டாம் என்பதை நாங்கள் அரசுக்குக் கூற வேண்டும். இந்தக் குழுக்களின் அறிக்கைகள் மூலம் இந்தக் கோரிக்கைகள் நியாயமானவை என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

ஒரு குழுவை நியமிப்பது நேரத்தை வீணடிக்கும் செயலாகும். அரசாங்கத்திடம் இருந்து எங்களுக்கு இன்னும் பதில் வரவில்லை, எனவே தொழிற்சங்கத் தலைவர்கள் தொழில்துறை நடவடிக்கையைத் தொடர ஒருமனதாக முடிவெடுத்துள்ளனர்..”


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »