Our Feeds


Friday, May 24, 2024

ShortNews Admin

கள்ளக்காதலால் இடம்பெற்ற கொலை!

 

ராகம நாரங்கொடபாலுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தகாத உறவினால் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவரின் மனைவியுடன் தகாத உறவில் இருந்த ஒருவரே இக்கொலையை மேற்கொண்டுள்ளதுடன், இருவரையும் ராகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர் நாரங்கொடபாலுவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »