ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் , செவ்வாய்கிழமை(21), ஈரானிய இஸ்லாமியக் குடியரசுத் தூதுவர் கலாநிதி அலி ரிஸா டெல்கோஷை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.
ஹெலிகொப்டர் விபத்தில் காலமான அந் நாட்டு ஜனாதிபதி கலாநிதி செய்யத் இப்ராஹிம் ரயிசி ,அவருடன் பயணித்த வெளி விவகார அமைச்சர் கலாநிதி அமீர் அப்துல்லாஹியன் மற்றும் அவர்களுடன் உயிரிழந்த தூதுக் குழுவினருக்காக அங்கு வைக்கப்பட்டுள்ள அனுதாப புத்தகத்தில் கையெழுத்திட்டார்.