Our Feeds


Friday, May 24, 2024

Anonymous

விபத்தில் 6 வயது குழந்தை பலி!

 

 

மோட்டார் வாகனமொன்று கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் 6 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

நேற்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 திருகோணமலை - மட்டக்களப்பு விதியின் சேருநுவரவில் இருந்து செருகல் நோக்கி மோட்டார் வாகனம் பணித்த போது சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மோட்டார் வாகனத்தில் சாரதியின் குடும்ப உறுப்பினர்கள் பயணித்துள்ள நிலையில் படுகாயமடைந்த இரண்டு குழந்தைகள் ஈச்சிலம்பற்று  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 அதில் ஒரு குழந்தை மேலதிக சிகிச்சைக்காக மூதூர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

06 வயதுடைய பருத்தித்துறை பிரதேசத்தை சேர்ந்த குழந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளது.

சடலம் மூதூர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஈச்சிலம்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »