தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பான விசாரணை முடியும் வரை தன்னை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த ரிட் மனுவை எதிர்வரும் 31ஆம் திகதி பரிசீலிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ரிட் மனுவை பரிசீலிப்பதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் இம்மாதம் 30 ஆம் திகதி கூடுமாறும் உத்தரவிட்டுள்ளது.