கந்தேநுவர, ஹுனுகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு
பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கந்தேநுவர பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் ஹுனுகல , எல்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது பெண்ணாவார்.
குடும்பத் தகராறு எல்லை மீறியதில் கணவர் தனது மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபரான கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தேநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.