Our Feeds


Sunday, April 7, 2024

SHAHNI RAMEES

லொறியில் மோதி தாதி உயிரிழப்பு...


 பணி முடிந்து கணவருடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த

களுபோவில போதனா வைத்தியசாலையின் தாதி ஒருவர் சீமெந்து ஏற்றப்பட்ட லொறியில் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


 


பிலியந்தலை ஜாலியகொட விஜய மாவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த தினுஷா கிரிஷாந்தி லியனகே என்ற 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே விபத்தில் உயிரிழந்துள்ளார்.


 


வார்டு எண் 11ன் தலைமை செவிலியராக பணிபுரிந்தார். இந்த விபத்தில் அவரது கணவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்


 


உயிரிழந்த தாதியின் கணவரும் தனியார் வைத்தியசாலை ஒன்றில் தொழிநுட்ப முகாமையாளராக கடமையாற்றுவதாகவும், பணியை முடித்துக் கொண்டு களுபோவில போதனா வைத்தியசாலைக்கு அருகில் சென்று மனைவியையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »