பிரான்ஸ் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் 650 மில்லியன் ரூபா
செலவில் பொலன்னறுவை மனம்பிட்டியவில் நிர்மாணிக்கப்பட்ட திரவ பால் உற்பத்தித் தொழிற்சாலை திறந்து வைக்கப்படவுள்ளது.விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சினால் மாவட்ட மட்டத்தில் பால் பதப்படுத்தும் நிலையங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இத்தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டது.
இதன்படி, 06 பிராந்திய பால் பதப்படுத்தும் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, மூன்றாவது நிலையம் நேற்று (05) திறந்து வைக்கப்பட்டது.