Our Feeds


Sunday, April 7, 2024

News Editor

மேற்கிந்திய தீவுகள், கிரிக்கெட் பயிற்சியாளராக ரமேஷ் சுபசிங்க தெரிவு


 மேற்கிந்திய தீவுகள் ஆண்கள் கிரிக்கெட் அகாடமியின் தலைமைப் பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் முதல்தர துடுப்பாட்ட வீரர் ரமேஷ் சுபசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, அவர் நியூசிலாந்து கிரிக்கெட் மேம்பாட்டு திட்டத்தில் தலைமை பயிற்சியாளராகவும் திறமை மேம்பாட்டு மேலாளராகவும் பணியாற்றினார்.

ரமேஷ் சுபசிங்க ஐசிசி தரம் 3 பயிற்சியாளராக தனது தகுதியை நிறைவு செய்துள்ளார்.

அகாடமியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த 53 பேரில் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகள் ஆண்கள் கிரிக்கெட் அகாடமி, நாட்டின் வளர்ந்து வரும் இளைஞர் கிரிக்கெட் அணியாகவும் கருதப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »