Our Feeds


Sunday, April 7, 2024

News Editor

காத்தான்குடியில் சட்டவிரோத பதிவாளர் அலுவலகம் சுற்றிவளைப்பு : ஒருவர் கைது!


 காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடியிலுள்ள வீடொன்றுக்குள் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த சட்டவிரோத பதிவாளர் அலுவலகம் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பை சேர்ந்த 54 வயதான ஒருவரே இந்த சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து தரிசுக் காணிகளுக்கான 205 உறுதிப்பத்திரங்கள், 58 வெற்று உறுதிப்பத்திரங்கள், 63 காணி மாற்று உறுதிப் பத்திரங்கள், கணினி, பிரின்டர், தட்டச்சு இயந்திரங்கள், வெவ்வேறு அதிகாரிகளின் உத்தியோகபூர்வ கையொப்பத்துடன் கூடிய 30 பத்திரங்கள், 12 தேசிய அடையாள அட்டைகளின் 12 பிரதிகள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபரும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »