பல கோரிக்கைகளை முன்வைத்து அகில இலங்கை ஆசிரியர் கல்வியாளர் சேவை வல்லுநர்கள் சங்கம் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
கோரிக்கைகள் தொடர்பில் தொழிற்சங்கத்தின் செயலாளர் தம்மிக்க மிரிஹான கல்வி அமைச்சுடன் கலந்துரையாடிய போதிலும் இதுவரையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை எனவும், எனவே அதனை வெற்றிகொள்ளும் நோக்கில் தொழிற்சங்கத்தின் நிறைவேற்று பேரவை தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும் தம்மிக்க மிரிஹான தெரிவித்தார்.