ஜனாதிபதித் தேர்தலுக்காக, இன்றிலிருந்து (07) நூறு நாட்களுக்குப் பின்னர், வேட்புமனுக்களை கோரும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவுள்ளது.
இதன்படி எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை எந்த நேரத்திலும் தேர்தல்கள் ஆணைக்குழுவால் கோர முடியும்.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான நேரத்தை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்ததன் பின்னர், தேர்தல் ஆணையாளர் நாயகம் வேட்புமனு தாக்கல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவார்.
இதன்படி, ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் 28 முதல் 35 நாட்கள் வரை தேர்தலுக்கு முந்திய பிரசார கால அவகாசம் பிரசாரம் செய்ய முடியும்.