மோடி அரசின் 'அண்டை நாடுகளுக்கு முதலிடம்'
என்ற வெளியுறவுக் கொள்கையின் கீழ், இலங்கைக்கு பெரிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய இந்தியா தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.இலங்கைக்கு ஆயிரக்கணக்கான மெட்ரிக் டொன் வெங்காயத்தை விநியோகிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக மேலும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையில் அதிக அளவில் வெங்காயம் கையிருப்பை வைக்கவும் நோக்கமாக கொண்டு இந்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.