அம்பாறையிலிருந்து வெலிமடைக்கு அரிசி ஏற்றிச் சென்ற
பாரிய லொறி ஒன்று பதுளை நுவரெலியா பிரதான வீதியில் வெல்லவெல சந்திக்கு அருகில் இன்று (19) கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ்விபத்தில் சாரதி மற்றும் உதவியாளர்கள் உட்பட மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அடம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதி இரும்பு இருக்கையில் சிக்கியிருந்த நிலையில், அப்பகுதி மக்களுடன் இணைந்து பொலிஸார் மிகுந்த கவனமெடுத்து சுமார் ஒரு மணித்தியால சத்திரசிகிச்சையில் அவரை காப்பாற்றி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து காரணமாக வீதியின் ஒரு பாதை முற்றாக மூடப்பட்டதுடன், ஒரு பாதை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியின் பிரேக் பழுதானதே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.