Our Feeds


Sunday, April 7, 2024

News Editor

லொறியில் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு


 பெற்றோருடன் ஆலயமொன்றில் குழந்தை சமய நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்த போது, குறித்த ​​குழந்தை பெற்றோரின் கவனத்தில் இருந்து தப்பி வீதிக்கு வந்தபோது லொறியில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அம்பாறை (Amparai) பிபில பிரதான வீதியில் நாமல் ஓயா பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.


இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


நேற்றிரவு (06.04.2024) இடம்பெற்ற இந்த விபத்தில் அம்பாறை, நாமல் ஓயா பகுதியைச் சேர்ந்த 02 வயது 07 மாதங்களேயான குழந்தை உயிரிழந்துள்ளது.


சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »