Our Feeds


Saturday, April 6, 2024

SHAHNI RAMEES

யாழில் வலையில் சிக்கிய 11 டொல்பின்கள் மீண்டும் கடலில் விடப்பட்டன ; மீனவர்களுக்கு பாராட்டு

 

யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (05) கரைவலையில் அகப்பட்ட 11 டொல்பின்களும் மீண்டும் கடலில் விடப்பட்டன.

கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த அருமைத்துரை சம்மாட்டியின் கரைவலையில் வெள்ளிக்கிழமை காலை க 11 டொல்பின்கள் அகப்பட்டன.

குறித்த டொல்பின்கள் வலைக்குள் அகப்பட்டதை அறிந்த மீனவர்கள் பத்திரமாக 11 டொல்பின்களையும் உயிருடன் மீட்டு மீண்டும் கடலுக்குள் பாதுகாப்பாக விட்டனர்.

டொல்பின்களை உயிருடன் கடலுக்குள் அனுப்பி வைத்த மீனவர்களுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »