Our Feeds


Tuesday, March 26, 2024

Anonymous

கைதிகளுக்கு வருமானம் ஈட்ட சிறைகளில் உற்பத்தித் தொழில்கள்..!

 


 நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து நல்ல குடிமக்களாக புனர்வாழ்வளிக்கும் நோக்கில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் உழைப்பில் கூடுதல் பங்களிப்புடன் உற்பத்தித் தொழில் பிரிவுகளை தனியார் தொழில்முனைவோரின் கீழ் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார்.
அவர்களின் உழைப்பை உற்பத்தி நடவடிக்கைகளில் பயன்படுத்தாமல் சிறைக்குள் அவர்களுக்கு வருமான ஆதாரத்தை வழங்க இத்திட்டம் எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கும் கைத்தொழில் அபிவிருத்திச் சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முதலீட்டாளர்களிடமிருந்து எதிர்வரும் 31ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார்.


இந்த வேலைத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், மஹர, வட்டரக, குருவிட்ட, வீரவில, மிதிரிகல, அனுராதபுரம், கந்தேவத்த, அங்குனகொலபெலஸ்ஸ, பதுளை தல்தென, நீர்கொழும்பு பல்லங்சேன மற்றும் பல்லேகல ஆகிய பதினொரு சிறைச்சாலைகளில் கைத்தொழில் பிரிவுகள் நிறுவப்பட உள்ளன.

இந்த சிறைச்சாலைகளில் உள்ள கட்டிடங்களில் பொருத்தமான கைத்தொழில் பிரிவுகளை நிறுவுவதற்கு பொருத்தமான முதலீட்டாளர்கள் வழங்கப்படுவதோடு, அவர்களின் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக கைதிகளின் உழைப்பு பங்களிப்பும் வழங்கப்படும் எனவும், இதற்காக கைதிகளுக்கு தொழில்துறை உரிமையாளர்களிடமிருந்து நாளாந்தம் கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் ஜகத் வீரசிங்க குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »