Our Feeds


Saturday, March 23, 2024

SHAHNI RAMEES

மைத்திரிபால சிரிசேனவை கைது செய்து விசாரணை நடத்தவும் ; முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை ..

 


ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளை சட்டத்தின் பிடியில் இருந்து மறைத்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை உடனடியாக கைது செய்ய வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி மத்திய கொழும்பு அமைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்தார்.



ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பல தடவை நீதிமன்றம் சென்ற மைத்திரிபால சிரிசேன ஈஸ்டர் குற்றவாளிகளை சட்டத்தின் தண்டனையில் இருந்து தப்பிக்க உதவி புரிந்துள்ளார். இது தேஷத்துரோக குற்றமாகும் அவரை குற்றவியல் சட்டத்தில் கைது செய்து நீதிமன்றில் முன்னிறுத்த வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்தார்.



மேலும் ஐக்கிய மக்கள் சக்தி கத்தோலிக்க சபை மைத்திரிபாலவை கைது செய்து விசாரணை செய்யுமாறு சி ஐ டியிடம் முறைப்பாடு செய்துள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »