Our Feeds


Sunday, January 28, 2024

SHAHNI RAMEES

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கை மீன்பிடிப் படகு!

 




சோமாலிய கடற்கொள்ளையர்களால் இலங்கை மீன்பிடி

படகு ஒன்று கடத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. 


அரபிக்கடலில் மீனவர்களுடன்  சென்று கொண்டிருந்த  இலங்கை மீன்பிடிப் படகே  இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 


கடந்த 12ஆம் திகதி சிலாபம், திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட “லொரென்சோ சோன் 04” என்ற மீன்பிடி படகையும் 6 மீனவர்களையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »