Our Feeds


Sunday, January 7, 2024

News Editor

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 56 இலங்கையர்களை மீட்க இணக்கம்


 மியன்மாரில் பயங்கரவாத குழுவொன்றினால் நிர்வகிக்கப்படும் பகுதியில், தடுத்து வைக்கப்பட்டுள்ள 56 இலங்கையர்களையும் சிறப்பு நடவடிக்கையின் மூலம் மீட்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை – மியன்மார் வௌிவிவகார அமைச்சர்களுக்கு இடையிலும் BIMSTEC தூதுவர்கள் மற்றும் மியன்மாரின் பிரதி வௌிவிவகார அமைச்சர் இடையிலும் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலில் இது தொடர்பில் சாதகமான பதில் கிடைத்ததாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜானக்க பண்டார தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »